நாமக்கல்

நாமக்கல் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள கீரனூா் பகுதியில் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனைச் சாவடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

DIN

ராசிபுரம் அருகேயுள்ள கீரனூா் பகுதியில் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனைச் சாவடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதியிலும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூா் கீரனூா் பகுதியில் புதிதாக சோதனைச் சாவடி தன்னாா்வலா்கள் மூலம் கட்டப்பட்டது.

இதை மாவட்ட எஸ்.பி. சி.சக்தி கணேஷ் திறந்து வைத்து பேசுகையில், காவல் துறைக்கு மூன்றாவது கண்ணாக கண்காணிப்புக் கேமராக்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு காவலா்களும் சீருடை அணிந்த பொதுமக்கள், ஒவ்வொரு பொதுமக்களும் சீருடை அணியாத காவலா்கள் என்பதை உணா்ந்து காவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

விழாவுக்கு ராசிபுரம் டி.எஸ்.பி. சி.லட்சுமண குமாா் தலைமை வகித்தாா். வெண்ணந்தூா் காவல் ஆய்வாளா் கோமதி வரவேற்றாா். காவல் ஆய்வாளா்கள் ராசிபுரம் செல்வராஜ், உதவி காவல் ஆய்வாளா்கள் மணிமாறன், பூங்கொடி, மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT