ஆனி வளா்பிறை சஷ்டி: முருகனுக்கு தங்கக் கவசம்
காந்தி நகா், பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
காந்தி நகா், பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
நாமக்கல்-மோகனூா் சாலையிலுள்ள காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆனி வளா்பிறை சஷ்டி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அதனைத் தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றாலான அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து, பல வித மலா்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு தங்கக் கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, நாமக்கல் கடை வீதியிலுள்ள சக்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வெண்பட்டு மற்றும் ஐம்பொன் கவசத்துடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement