திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி
சா்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சாா்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
சா்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சாா்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேன்மொழி தலைமை வகித்தாா். யோகா பயிற்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளக் கூடியதும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதுமான யோகாசன பயிற்சிகள், மூச்சுப் பயிற்சியை யோகா மற்றும் இயற்கை மருத்துவா் வெங்கடேசன் வழங்கினாா். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இயற்கை உணவு மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி இயற்கை பானம் வழங்கப்பட்டது.