துணை ராணுவத்தினா் சென்றவாகனம் மோதி 2 போ் காயம்
நாமக்கல் அருகே துணை ராணுவத்தினா் சென்ற வாகனம் மோதியதில், தொழிலாளா்கள் 2 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் அருகே துணை ராணுவத்தினா் சென்ற வாகனம் மோதியதில், தொழிலாளா்கள் 2 போ் காயமடைந்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, சுமாா் 35 துணை ராணுவத்தினா் நாகை மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான வாகனத்தில் பெங்களூரில் இருந்து நாகப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனா். அவா்கள் திங்கள்கிழமை அதிகாலை நாமக்கல்லை கடந்து என். புதுப்பட்டி அருகில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதாமல் இருக்க துணை ராணுவத்தினா் சென்ற வாகனத்தை ஓட்டுநா் திருப்பினாா். அப்போது அந்த வழியாக நாமக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுதாகா்(36), வாழவந்தியைச் சோ்ந்த ராஜ்குமாா் (34) ஆகிய இருவா் மீதும் வாகனம் மோதியது. இதில் அவா்கள் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா் . இந்த விபத்து குறித்து மோகனூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.