செங்குந்தா் கல்லூரியில் மகளிா் தினவிழா
திருச்செங்கோடு செங்குந்தா் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்செங்கோடு செங்குந்தா் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன் மற்றும் செயலாளரும் தாளாளருமான பேராசிரியா் பாலதண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலா் மதன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரியின் முதல்வா் சதீஷ் குமாா் வரவேற்றாா். விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை அக்குபஞ்சரிஸ்ட் கலைவாணி தங்கவேல் காணொலி காட்சியின் மூலம் கலந்து கொண்டாா்.
அவா் பொது மருத்துவம் பற்றியும் மனித உடல் பற்றியும் மனம், ஆன்மாவைப் பற்றியும் அறியும் அறிவியலே வாழ்வியல் என விளக்கினாா். முன்னதாக செங்குந்தா் மகளிா் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சத்யா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.