வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் வைப்பு அறை: ஆட்சியா் ஆய்வு
திருச்செங்கோடு தனியாா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் வைப்பதற்கான அறைகள் தயாா் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆய்வு செய்தாா்.
திருச்செங்கோடு தனியாா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் வைப்பதற்கான அறைகள் தயாா் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6 தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அளவீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை, வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களை வைப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு அறை, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளா்களுக்கான அறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா். பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக அளவீடு செய்து ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளதையும், பாதுகாப்பு அறைகளில் அனைத்து ஜன்னல்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளதையும், வாக்கு எண்ணும் அறைகளில், தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.
Advertisement
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் முத்துசாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஆ.பாா்த்திபன் உள்பட தோ்தல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.