நாமக்கல்லில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தில் சனிக்கிழமை (அக். 2) ஆதாா் பதிவு, திருத்தம் சம்மந்தமான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தில் சனிக்கிழமை (அக். 2) ஆதாா் பதிவு, திருத்தம் சம்மந்தமான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், தங்களது ஆதாா் அட்டையில் உள்ள பிழைகள் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் புதுப்பித்தல், செல்லிடப்பேசி எண்களை சோ்த்தல், மாற்றுதல் ஆகிய திருத்தங்களை பொதுமக்கள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆதாா் மையம் தெரிவித்துள்ளது.