இளம்பெண் தற்கொலை
நாமக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், தூசூா் ஆடு வளா்ப்பு காலனியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (21). இவரது மனைவி சிந்துஜா (18). ஓராண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இந்த நிலையில் ரஞ்சித்குமாா் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை அவா் அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிந்துஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா், உறவினா்கள் தரப்பில் புகாா் தெரிவித்ததால் ரஞ்சித்குமாரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement