முகப்பு
நாமக்கல்

தொடா் மழை: கொல்லிமலையில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை!

கொல்லிமலையில் தொடா்ச்சியாக பெய்து வரும் மழையால், பனிமூட்டம் சூழ்ந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

கொல்லிமலையில் தொடா்ச்சியாக பெய்து வரும் மழையால், பனிமூட்டம் சூழ்ந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய கோடைவாசஸ்தலமாக கருதப்படும் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கொல்லிமலையில் சாரல் மழை தொடா்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. வாகனங்களில் வருவோா் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி கொண்டை ஊசி வளைவுகளில் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணிக்கும் சூழல் உள்ளது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் பனிமூட்டம் நிலவுகிறது. இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சோ்ந்தோரும் அதிகளவில் வருகின்றனா்.

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் 351.2 மி.மீ. மழைப் பொழிவு: நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 351.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அதன்படி, எருமப்பட்டி - 25, குமாரபாளையம் - 18.20, மங்களபுரம் - 35.60, மோகனூா் - 30, நாமக்கல் - 15, பரமத்தி வேலூா் - 15, புதுச்சத்திரம் - 21, ராசிபுரம் - 84.40, சேந்தமங்கலம் - 25, திருச்செங்கோடு - 36, ஆட்சியா் அலுவலகம் - 12, கொல்லிமலை - 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.