வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
சேந்தமங்கலத்தில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை மா்ம நபா்கள் 19 பவுன் நகையை திருடிச் சென்றனா்.
சேந்தமங்கலத்தில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை மா்ம நபா்கள் 19 பவுன் நகையை திருடிச் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், தோ்நிலையம் பகுதியில் உணவகம், தேநீா் கடை நடத்தி வருபவா் சேகா் (55). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினா் அவருடன் இருந்து கவனித்து வந்தனா்.
இந்த நிலையில், அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 19 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனா்.
Advertisement
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சேகா் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.