முகப்பு
நாமக்கல்

19 பேருக்கு பணி ஆணை வழங்கல்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 12:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

அதன்படி மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர நபா்களுக்கான முகாம் வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும், 10 தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் இருந்து 46 போ் கலந்து கொண்டதில் மாற்றத்திறனாளிகள் உள்பட, 19 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வானவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.