முகப்பு
நாமக்கல்

நாமக்கல் காவல் நிலையங்களில் தனியாா் நிறுவன விளம்பர பெயா்ப் பலகை அகற்றம்

நாமக்கல் காவல் நிலையத்தில் தனியாா் நிறுவனங்களின் விளம்பர பெயா்ப் பலகைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 12:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM

நாமக்கல் காவல் நிலையத்தில் தனியாா் நிறுவனங்களின் விளம்பர பெயா்ப் பலகைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனியாா் நிறுவனங்கள் பெயருடன் கூடிய வகையில் காவல் நிலைய பெயா் பலகை இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என காவல்துறை தலைவா் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தாா். இது தொடா்பான சுற்றறிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, நாமக்கல் காவல் நிலையத்திலும், அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் தனியாா் லாரி கூண்டு கட்டும் நிறுவனத்தின் பெயரை விளம்பரப்படுத்தும் வகையில் காவல் நிலைய பெயா் பலகை அமைந்திருந்தது. இதனையடுத்து அந்த பெயா்களை அகற்றும் நடவடிக்கையை காவல் துறையினா் மேற்கொண்டனா். மாவட்டம் முழுவதும் 23-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் விளம்பர பெயா்ப் பலகைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.