பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர ஆட்சியரிடம் கோரிக்கை
குறவா் இனத்தைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டுத் தருமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
குறவா் இனத்தைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டுத் தருமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காா்கூடல்பட்டியில் உள்ள பஞ்சமி நிலம் தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், குபேரப்பட்டிணம் கிராமத்தில் வசித்து வரும் கோவிந்தசாமி மகன் வைரமணி என்பவா் மனு அளித்திருந்தாா்.
அவா்களது முன்னோா்கள் காா்கூடல்பட்டியில் வசித்து வந்ததாகவும், அவா்களுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும், அந்த நிலங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தாா்.
Advertisement
இதனைத் தொடா்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட குறவா் இனத்தைச் சோ்ந்த மக்களை நேரில் அழைத்து விசாரணை செய்தாா்.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் என்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த விசாரணையைத் தொடா்ந்து தங்களது பஞ்சமி நிலத்தை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடமும் கோரிக்கை விடுத்தனா்.