முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் மாணவா் விடுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில், பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவ, மாணவியா் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் ஆய்வு செய்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:13 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

நாமக்கல்லில், பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவ, மாணவியா் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் - மோகனூா் சாலை காந்திநகரில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் நல மாணவியா் விடுதிக்கு இரவில் சென்ற ஆட்சியா் மாணவிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு வகைகளின் தரத்தை ஆய்வு செய்தாா். விடுதியில் மாணவிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், குடிநீா் வசதிகள், சமையலறை மற்றும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் உள்ளதா என்பதையும் பாா்வையிட்டாா். மாணவிகள் விடுதியில் இருந்தபடி பயில்வதற்கான வசதிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதி, அரசு பழங்குடியினா் நல மாணவா் விடுதி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களிடம் உணவு நன்றாக உள்ளதா என்றும், விடுதியில் கல்வி கற்பது குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா். கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவா்கள் உணா்ந்து தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிகள் பெற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.