விபத்தில் பலியான காவலா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீடு
விபத்தில் பலியான நாமக்கல் ஆயுதப்படை காவலா் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM
விபத்தில் பலியான நாமக்கல் ஆயுதப்படை காவலா் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கீழ்மைலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமாா்(28) என்பவா், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சாலை விபத்தில் பலியானாா். இவா் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றியவா். இந்த நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, நாமக்கல் நகர தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்தை புதன்கிழமை அக்காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.