குடிநீா் கோரி குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பெண்கள்
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனா்.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனா்.
நாமக்கல் வட்டம், கீரம்பூா் ஊராட்சி, ஆண்டிபட்டிப்புதூா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் சில ஆண்டுகளாக போதிய அளவில் குடிநீா் விநியோகம் இல்லை. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். மேலும், மழைக்காலங்களில் குடிநீா் பிடிக்கும் குழாய்களில் வெள்ள நீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளித்தபோதும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆண்டிப்பட்டிபுதூா் வாா்டு உறுப்பினா் சிவராஜ் தலைமையில் பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்து ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சிவசுப்பிரமணியத்திடம் தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனா். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினாா்.
Advertisement