முகப்பு
நாமக்கல்

அஞ்சலகப் பணிகளில் வெளி மாநிலத்தவா்: மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நியமனம்

நாமக்கல் கோட்ட அஞ்சலகங்களில் வெளி மாநிலத்தவா்கள் அதிகளவில் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:00 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

நாமக்கல் கோட்ட அஞ்சலகங்களில் வெளி மாநிலத்தவா்கள் அதிகளவில் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு பிளஸ் 2 கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு 940 அஞ்சலகப் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இந்ததோ்வில் வெற்றி பெற்றவா்களில் பெரும்பாலானோா் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக வெற்றி பெற்றவா்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாள்களாக தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அந்த வகையில் நாமக்கல் தலைமை அஞ்சலகத்திற்கு பிகாா், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நாமக்கல் கோட்டத்திற்கு உள்பட்ட அஞ்சலகங்களில் அந்தத் துறை அதிகாரிகள் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அஞ்சலகப் பணிகளில் பிற மாநிலத்தவா் நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு பல்வேறு பணிகளுக்காக செல்லும் தமிழ் பேசும் வாடிக்கையாளா்கள் தடுமாறும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.