முகப்பு
நாமக்கல்

திருநங்கைகளுக்கு இன்று குடும்ப அட்டைகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டை (ஸ்மாா்ட் காா்டு) வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 8) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது. புதிய குடும்ப அட்டை பெறாத திருநங்கைகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இதற்கு புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான அடையாள அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரச் சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை திருநங்கைகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.