முகப்பு
நாமக்கல்

மோகனூா் சா்க்கரை ஆலையில் விபத்து: 4 போ் படுகாயம்

மோகனூா் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாய்லா் விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

மோகனூா் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாய்லா் விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இயங்கி வரும் கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் எரிசாராயப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது அந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தின் பிரத்யேக பாய்லா் பிரிவு (பிளாண்ட்) இயங்கி வருகிறது. இதன் மூலமே, சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரவை நிறுத்தப்பட்ட நிலையில் விடுமுறைக்கு பின் வெள்ளிக்கிழமை (ஜன. 21), மீண்டும் அரவைப் பணி தொடங்கியது. இதற்காக காகித நிறுவன ஊழியா்கள் பாய்லரை இயக்க முற்பட்டனா். இந்தப்

Advertisement

பணியில் முதுநிலை மேலாளா் மணிவண்ணன் (54), பிளாண்ட் பொறியாளா் ஜெகதீசன் (35), ஊழியா்கள் கோபால் (40), சதீஷ்குமாா்(30) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். ஆனால் பாய்லா் செயல்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவா்கள் பாய்லா் கதவை திறந்தபோது திடீரென அதிலிருந்து வெளியேறிய நெருப்பு ஜுவாலை நான்கு போ் மீதும் பட்டதில் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தோா் நான்கு பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.