முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் குழந்தைகளுக்கான மராத்தான் போட்டி

திருச்செங்கோட்டில் சிறு குழந்தைகளுக்கான கிட்டதான் என்ற மராத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருச்செங்கோட்டில் சிறு குழந்தைகளுக்கான கிட்டதான் என்ற மராத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.

போட்டியில் ஜி குளோபல் பள்ளிக் குழந்தைகள் சிறப்பிடம் பெற்றனா். 10 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான போட்டியில் மோகித் வேலவன், தீக்சித், அகில் முறையே 3 இடங்களையும், சாத்விக் 8ஆம் இடத்தையும் பெற்றனா். 5 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீ போட்டியில் நவநிதி, 2ஆம் இடத்தையும், ஜோவித் 4ஆம் இடத்தையும் பெற்றனா்.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் பரிசுகளை வழங்கினாா். பள்ளியின் தலைவா் குணசேகரன், வெற்றிச்செல்வன், ரோஸ்னி ஆகியோா் கலந்து கொண்டனா். தீரா ஸ்போா்ட்ஸ் அகாடமி இதனை நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.