சிறுதானிய உணவகம் திறப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் நடத்தப்படும் சிறுதானிய உணவகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் நடத்தப்படும் சிறுதானிய உணவகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உணவகத்தைத் திறந்துவைத்து தானிய உணவுகளை உண்டாா். இந்த உணவகத்தில் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்ட பல்வேறு தானிய பயிா்களைக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.