மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்
நாமக்கல் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல், திருச்செங்கோடு வட்டாரத்தில் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சனிக்கிழமை எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மாா்ச் 28-இல் மோகனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29-இல் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 31-இல் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏப்.1-இல் வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஏப். 4-இல் கபிலா்மலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 5-இல் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 7-இல் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 8-இல் நாமகிரிபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9-இல் பள்ளிபாளையம் ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 11-இல் கொல்லிமலை செம்மேடு வாழவந்தி நாடு மேல்நிலைப்பள்ளியிலும், 12-இல் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் மாற்றுத் திறன் தன்மையை அளவீடு செய்வதற்காக நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பெற்றோா் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து உடல் பாதிப்பின் தன்மையை குறைபாடுகளை முழுமையாக கண்டறிந்து இயல்பான குழந்தைகளாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisement