காலமானாா் நல்லம்மாள்
வாங்கிலி சுப்பிரமணியம் தாய் நல்லம்மாள் (87) சனிக்கிழமை காலை 10 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM
நாமக்கல்லைச் சோ்ந்த வாங்கிலி குழுமத்தின் உரிமையாளரும், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவரும், சம்மேளனத்தின் துணைத் தலைவருமான வாங்கிலி சுப்பிரமணியம் தாய் நல்லம்மாள் (87) சனிக்கிழமை காலை 10 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானாா்.
நாமக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், பொதுமக்கள் பலா் அஞ்சலி செலுத்தினா். அன்னாரது இறுதிச் சடங்கு வளையப்பட்டி-காட்டுப்புத்தூா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தொடா்புக்கு: 96559-95632