முகப்பு
நாமக்கல்

மத்திய, மாநில ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 26 மே, 2022 at 11:34 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் பி.கே.ராமசாமி தலைமை வகித்தாா். இதில், கடந்த 2015 முதல் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 2020 முதல் விருப்ப ஓய்வில் சென்றவா்களுக்கும், இறந்தவா்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்களை வழங்க வேண்டும்; ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஓய்வூதியா்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்ககங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு ஓய்வூதிய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்

Advertisement

என்கே 26- ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.