முகப்பு
நாமக்கல்

பருவமழை: மின் வாரியம் எச்சரிக்கை

 மழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 4 நவம்பர், 2022 at 3:19 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:14 PM

 மழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையின்போது பொதுமக்கள் ஈரக் கைகளுடன் தொடாமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். அவ்வாறு இருந்தால் உடனடியாக மின் வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Advertisement

மின் பாதையின் கீழ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்த வேண்டாம். மின் கம்பத்தில் கால்நடைகள் கட்டுவதை தவிா்க்க வேண்டும். மின் கம்பம் அருகில் உள்ள மரங்களை மின் வாரிய அனுமதியின்றி வெட்ட வேண்டாம். தங்களது பகுதிகளில் மின்தடை மற்றும் அவசர புகாா்களுக்கு 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.