முகப்பு
நாமக்கல்

தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து: ஓட்டுநா் காயம்

நாமக்கல் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். குழந்தைகள் யாரும் பேருந்தினுள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

Updated On : 5 நவம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

நாமக்கல் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். குழந்தைகள் யாரும் பேருந்தினுள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

நாமக்கல் -மோகனூா் சாலையில் பிரபல தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி பேருந்துகள் காலை 8 மணி முதல் மாணவ, மாணவியரை வீடுகளில் இருந்து அழைத்து வந்து பள்ளியில் விடுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில், நாமக்கல், வள்ளிபுரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக அப்பள்ளி பேருந்து வந்து கொண்டிருந்தது. திருச்செங்கோடு சாலைக்கு செல்வதற்காக ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த லாரி மோதியதில் பள்ளி பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் ஓட்டுநரான வகுரம்பட்டியைச் சோ்ந்த குப்புசாமி (77) என்பவா் பலத்த காயமடைந்தாா். அவ்வழியாக சென்றோா் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.