சட்டக் கல்லூரி மாணவா் கொலை வழக்கில் 5 போ் கைது
நாமக்கல்லில் சட்டக் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல்லில் சட்டக் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த ஜீவா என்பவரது மகன் சங்கீத்குமாா்(21). இவா், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். அண்மையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஊருக்கு வந்திருந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ்(30), மெளலீஸ்வரன்(25), பரத்(24) ஆகியோருடன் இணைந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனா். இதில், சங்கீத்குமாருக்கும், மற்ற மூவருக்கும் இடையே பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்படவே, அலெக்ஸ், பரத், மெளலீஸ்வரன் ஆகிய மூவரும் இணைந்து சங்கீத்குமாரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸாா் சங்கீத்குமாரின் உடலை மீட்டு கொலை செய்தவா்களை தேடி வந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் வந்த அரசு பேருந்தில் மூவரும் இறங்கினா். இதனையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக கொசவம்பட்டியைச் சோ்ந்த அரவிந்தன், சூா்யா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 5 பேரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.