ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு
நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM
நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்தனா்.
நாமக்கல்-பரமத்தி சாலையில், காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மாதேஸ்வரன். தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறாா். அவற்றில் பசு ஒன்றுக்கு சினை பிடித்தது. நாமக்கல் வள்ளிபுரம் கால்நடை மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் சினை பசு மாடு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் பசுவுக்கும், கன்றுக்கும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினா்.