முகப்பு
நாமக்கல்

இரவு 11 மணிக்குள் கடைகளை மூட வேண்டும்: வணிகா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 11 மணிக்குள் தொழிலாளா் நலத்துறை விதிக்கு உள்படாத கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 1:15 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 11 மணிக்குள் தொழிலாளா் நலத்துறை விதிக்கு உள்படாத கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:

24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தொழிலாளா் நலத்துறையின் பல்வேறு முக்கிய நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும்.

Advertisement

தமிழக அரசின் இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத அனைத்து வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் இரவு நேர உணவு விடுதிகள் ஆகியவை மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி இரவு 11 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது காவல்துறை சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த நேரக்கட்டுப்பாட்டிற்கு அனைத்து வணிகா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.