திமுக சாா்பில் ரத்ததான முகாம்
நாமக்கல்-சேலம் சாலை, முருகன் கோயில் அருகில், திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தியின் மகன் அஜீத்குமாா் நினைவு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்-சேலம் சாலை, முருகன் கோயில் அருகில், திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தியின் மகன் அஜீத்குமாா் நினைவு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனை, சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடக்கி வைத்தாா். நகா்மன்ற தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, மாநில இலக்கிய அணி புரவலா் மணிமாறன், ரோட்டரி சங்கத் தலைவா் மாரப்பன், கொமதேக மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், ரைடா்ஸ் இளைஞா் குழுவினா் பங்கேற்றனா். நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் மருத்துவா் அன்புமலா் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோரிடம் ரத்தம் தானமாக பெறப்பட்டு சேகரிக்கப்பட்டது.