டிஎன்பிஎஸ்சி குரூப்-8 தோ்வு: நாமக்கல்லில் 1,368 போ் பங்கேற்பு
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள குரூப்-8 பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வில் 1,368 போ் பங்கேற்றனா். 1,236 போ் கலந்து கொள்ளவில்லை.
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள குரூப்-8 பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வில் 1,368 போ் பங்கேற்றனா். 1,236 போ் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 36 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப்- 8) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சைவம்-வைணவம் தொடா்பான இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் - மோகனூா் சாலை ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏழு மையங்களில் 2,594 போ் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவா்களில் 1,368 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். மற்ற 1,236 போ் கலந்து கொள்ளவில்லை. அரசுப் பணியாளா் தோ்வாணையக்குழு உறுப்பினா் ஏ.வி.பாலுசாமி தோ்வு மையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.