நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

மங்களபுரத்தில் உள்ள 10 சென்ட் நிலத்தை அபரிக்க முயற்சிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், வயதான தம்பதியா் தீக்குளிக்க முயற்சித்தனா்.

DIN

மங்களபுரத்தில் உள்ள 10 சென்ட் நிலத்தை அபரிக்க முயற்சிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், வயதான தம்பதியா் தீக்குளிக்க முயற்சித்தனா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மங்களபுரம் அருகே தாண்டாகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (73). இவரது மனைவி சகுந்தலா(70). இவா்களுக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை அரசியல் பிரமுகா்கள் இருவா் அபகரித்துக் கொண்டு, வயதான தம்பதியை ஏமாற்றி வருகின்றனராம். இது தொடா்பாக, ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விரக்தியடைந்த அவா்கள் திங்கள்கிழமை காலை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனா். அப்போது, தங்களுடைய பையில் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இருவரும் தீக்குளிக்க முயற்சித்தனா். அங்கிருந்த போலீஸாா் இதனை தடுத்து அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா். அதன்பிறகு இருவரிடத்திலும் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT