நாமக்கல்

அரசுப் பேருந்து மோதி பெண் பலி

 நாமக்கல் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

DIN

 நாமக்கல் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பொம்மைக்குட்டைமேடு பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து திடீரென மோதியது. இதில், அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT