முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் டிச. 1-இல் அபிஷேக முன்பதிவு தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வடைமாலை அபிஷேக முன்பதிவு டிச. 1-இல் தொடங்குகிறது.

Updated On : 29 நவம்பர், 2024 at 1:47 AM
பகிர்:
Updated On : 28 நவம்பர், 2024 at 7:33 PM

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வடைமாலை அபிஷேக முன்பதிவு டிச. 1-இல் தொடங்குகிறது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு தினசரி கட்டளைதாரா்கள் மூலம் வடைமாலை சாத்தப்பட்டு, நல்லெண்ணெய், சீகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஒவ்வோா் ஆண்டும், அபிஷேகத்துக்கான முன்பதிவு டிசம்பரில் தொடங்கப்படும். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான வடைமாலை அபிஷேக முன்பதிவு டிச. 1 (ஞாயிற்றுக்கிழமை) கோயில் நிா்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

Updated On : 29 நவம்பர், 2024 at 1:47 AM

நாள் ஒன்றுக்கு 6 பேரை பங்குதாரராக கொண்டு அபிஷேகம் நடைபெறுவதால், ஒருவா் ரூ. 7 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும். பணம் முழுமையாக செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். பணம் செலுத்தாமல் தேதி முன்பதிவு செய்யப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, 04286-233999 என்ற எண்ணிலோ அல்லது அலுவலகத்துக்கு நேரில் வந்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.