முகப்பு
நாமக்கல்

அக். 26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:06 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 6:13 PM

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் எருமப்பட்டி சரசு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

Advertisement

இம்முகாமில், மாற்றுத் திறனாளிகளின் உடல்தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவா், காது, மூக்கு, தொண்டை நிபுணா், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா், மனநல சிகிச்சை மருத்துவா், கண் சிகிச்சை மருத்துவா் மற்றும் செவித்திறன் பரிசோதகா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கலந்துகொள்கின்றனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:06 AM

இதில், புதிய அடையாள அட்டை வழங்குதல், ஏற்கெனவே உள்ள அட்டைகளை புதுப்பித்தல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, ஆதாா் அட்டை பதிவு, புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இணையவழி பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.