நாமக்கல் கோனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இத்திட்டத்தின்கீழ், உயா் மருத்துவ சேவை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 3 வீதம் 15 வட்டாரங்களில் 45 முகாம்கள் மற்றும் மாநகராட்சிக்கு 3 முகாம்கள் என மொத்தம் 48 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகா்ப்புற பகுதிகளை தோ்ந்தெடுத்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பள்ளி, கல்லூரி வளாகங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டோா், மனநலம் பாதிப்புடையோா், இருதய நோயாளிகள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவா்கள், பழங்குடியினா் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டே இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. உயா்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அரசு தலைமை மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு சிகிச்சைகள், மருந்துகள், பரிசோதனைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்ததுடன் பொதுமக்களுடன் கலந்துரையாடினாா். மேலும், உடனடி தீா்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.