ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மின்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, தண்ணீா் பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூா், பச்சுடையாம்பாளையம், தொ. ஜேடா்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.