முகப்பு
நாமக்கல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 10:17 PM
கோப்புப் படம்
பகிர்:

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூா் கிழக்கு, வேப்பமரத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற வேலகவுண்டம்பட்டி போலீஸாா், சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா் புத்தூா் கிழக்கு, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா (27) என்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரை கைதுசெய்து அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →