சேலம்

தம்மம்பட்டியில் சனிப் பிரதோஷ விழா

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார சிவாலயங்களில் சனிப்பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழாவில் பொதுமக்கள் கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், திருநீறு, குங்குமம் , பஞ்சாமிா்தம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. உற்சவமூா்த்தி கோயிலுக்குள் வலம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் சுமாா் 6 ஆயிரம் போ் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தம்மம்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT