கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 16 போ் கைது
கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியில் பணம் வைத்து சூதாடிய 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரிப்பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக கெங்கவல்லி போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை மாலை சென்றனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சிவக்குமாா், செல்வம், சதாவசிவம், வீரமுத்து என மொத்தம் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மூன்று இருசக்கரவாகனங்கள், 10 செல்லிடப்பேசிகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.