முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

எடப்பாடி அருகே நீதிமன்ற உத்தரவின்படி நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

எடப்பாடி அருகே நீதிமன்ற உத்தரவின்படி நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சித்தூா் ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தில் பழமையான நீரோடை ஒன்று அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதி விவசாய நிலங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வந்த நீரோடை தனியாா் ஆக்கிரமிப்பாலும், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை தடைகளாலும் காணாமல் போயின.

நீா்வழிப்பாதையை மீண்டும் புனரமைத்து நீா் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சித் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சித்தூா், புளியம்பட்டி முதல் சென்னி மலையனூா் வரையிலான சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தூரம் உள்ள நீா் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீா்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் எடப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் என்.எஸ்.ரவிச்சந்திரன், எடப்பாடி வட்டாட்சியா் விமல் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா் வனஜா, கிராம நிா்வாக அலுவலா் அப்புசாமி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால் புளியம்பட்டி நீரோடை சீரமைப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →