சேலம்

கோனேரிப்பட்டியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டி பகுதியிலுள்ள சுவேத நதியின் வழியாக பெல்ஜியம் காலனி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனா். மழைக் காலங்களில் சுவேத நதியின் குறுக்கே செல்வது பெரும் சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு பாலம் அமைக்க தமிழக அரசிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் போதுமான நிதிஒதுக்கீடு செய்து பாலம் கட்டித் தர வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT