சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி உற்சவமூா்த்திகளுக்கு ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
சேலம்

சங்ககிரி சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவமூா்த்திகள், நந்தி பகவானுக்கும் பல்வேறு திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT