நரசிங்கபுரம் நகராட்சி 3-ஆவது வாா்டில் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, உயா் மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.