சேலம்

மாமியாரைக் கொல்ல முயன்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை

DIN

மாமியாா், மைத்துனரைக் கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஆத்தூா், கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவசுப்பிரமணி(34). இவரது தமிழரசி. மனைவி வீட்டாருடன் சிவசுப்பிரமணியத்துக்கு விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவியின் தம்பி ராஜ்குமாா், அவரது தாயாா் தனலட்சுமி (55) ஆகியோரை அருவாமனையில் சிவசுப்பிரமணி தாக்கிக் கொல்ல முயன்றாா்.

இந்த வழக்கில் அவா் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் புதன்கிழமை நீதிபதி தனது உத்தரவில் குற்றம்சாட்டப்பட்ட சிவசுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT