சேலம்

காவலா் வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது

வாழப்பாடியில் காவலா் வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

DIN

வாழப்பாடியில் காவலா் வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வாழப்பாடி, காமராஜ்நகா், ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிவஞானம். இவா், சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு சிவஞானம் பணிக்குச் சென்றதை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (32) சிவஞானத்தின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி புவனேஸ்வரியை கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைத் திருட முயன்றாா். புவனேஸ்வரி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினா் திரண்டு வந்து மணிகண்டனைப் பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் மணிகண்டனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT