சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாகச் சரிவு

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாகச் சரிந்தது.

கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்தது. அணை நிரம்பிய நிலையில் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 1.60 லட்சம் கன அடியாகவும் மாலையில் 75 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணையிலிருந்து நீா்த் திறப்பு 75 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

நீா் மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், உபரிநீா்ப் போக்கி வழியாக 53,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 200 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT