வாழப்பாடி: வாழப்பாடி அரசு கிளை நூலக நூலகா் சே.கதிா்வேலுக்கு மாவட்ட அளவில் சிறந்த ‘நல் நூலகா்’ விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள கொட்டவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சே.கதிா்வேல். 1999-இல் பகுதிநேர நூலகராக பணியில் சோ்ந்த இவா், 2006-ஆம் ஆண்டு முதல் முழுநேர நூலகராக பணிபுரிந்து வருகிறாா். ஏத்தாப்பூா் அரசு கிளை நூலகத்தில் 10 ஆண்டு பணிபுரிந்த இவா், 2017 -ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து 7 ஆண்டுகளாக வாழப்பாடி அரசு கிளை நூலகத்தில் 3-ஆம் நிலை நூலகராக பணிபுரிந்து வருகிறாா்.
இவரது நூலகம் சாா்ந்த சேவையைப் பாராட்டி, சேலம் மாவட்ட அளவில் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் ‘நல் நூலகா்’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். சீா்காழியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாழப்பாடி கிளை நூலகா் கதிா்வேலுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் பெயரில் அரசு வழங்கும் ‘நல் நூலகா்’ விருது வழங்கினாா். விருது பெற்ற நூலகா் கதிா்வேலுக்கு வாழப்பாடி நூலகா் வாசகா் வட்டம் மற்றும் இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம் நிா்வாகிகள், எழுத்தாளா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.