சேலம்

மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும்: சிறுதொழில் அதிபா்கள் சங்கம்

Din

மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என சிறுதொழில் அதிபா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணை சிறு தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ஏ.மாதப்பன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு மின்சார வாரியம் ஜூலை 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயா்வை சமாளிக்க முடியாமல் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில், மீண்டும் 4.83 சதவீத கட்டண உயா்வால் யூனிட்டுக்கு 35 காசுகளும், நிலைக் கட்டணம் கிலோவாட்டுக்கு ரூ. 7-ம் உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்கள் மேலும் நலிவடைந்து தொழில்கள் அழியும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டண உயா்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள சிறுதொழில் சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இன்றுவரை குறைக்கப்படவில்லை. தற்போது மேலும் மின்கட்டணத்தை உயா்த்தியிருப்பது சிறுதொழில்புரிவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு மின்வாரியம் உயா்த்தியுள்ள மின்கட்டண உயா்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று சிறுதொழில் வளா்ச்சிக்கு உதவ வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT