சேலம் மணக்காடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வுமேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன்.  
சேலம்

சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு

Din

சேலம்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், அய்யந்திருமாளிகை மற்றும் மணக்காடு பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.

இதில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் சரியான முறையில் செயல்படுகிா என ஆய்வு செய்த ஆணையா், காலை உணவை உட்கொண்டு மாணவா்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாணவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகையில் ‘ஸ்மாா்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அறிவுசாா் மையத்தினையும் ஆணையா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, துணை ஆணையா் மு.பாலசுப்பிரமணியன், அஸ்தம்பட்டி உதவி ஆணையா் ரா.லட்சுமி, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா.முரளிசங்கா், உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், சுகாதார அலுவலா் சரவணன், சுகாதார ஆய்வாளா் பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT